PUBLISHED ON : ஜூன் 04, 2024 12:00 AM

கொட்டாம்பட்டி : கோட்டைபட்டியில் 2 நாட்களுக்கு முன் பெய்த மழையில் நெற் பயிர்கள் சாய்ந்தன.
அதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதித்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நேற்று வருவாய் ஆய்வாளர் இக்பால், வேளாண் அதிகாரி கணபதி உள்ளிட்டோர் பாதிப்பு குறித்து நேரில் ஆய்வு செய்தனர்.