PUBLISHED ON : மே 18, 2025 12:00 AM

அறிவியல் ஆயிரம்
சனியில் மழை
சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்து வானில் இருந்து மழை பெய்து ஆறு, ஏரி உள்ளிட்டவை நிரம்புவது சனி கோளின் நிலவுகளின் ஒன்றான டைட்டனில் தான். இது சனியில் உள்ள மொத்த நிலவுகளில் (274) பெரியது. இந்நிலையில் டைட்டனில் மழைத்துளி என்பது பூமியைப் போல தண்ணீராக இருப்பதில்லை. அதற்குப்பதில் மீத்தேன், ஈத்தேனாக இருக்கிறது என நாசாவின் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் ஆய்வு தெரிவித்துள்ளது. அதே போல பூமியில் வாயுக்களாக இருக்கும் ஹைட்ரோகார்பன்கள், டைட்டனின் குளிர்ச்சியான சூழலில் குளிர்ந்த திரவங்களாகச் செயல்படுகின்றன.