PUBLISHED ON : ஜூன் 28, 2025 12:00 AM

அறிவியல் ஆயிரம்
அலைபேசி ஆபத்து
'டாய்லெட்டில்' அலைபேசி பயன்படுத்துவதால் அதிலுள்ள பாக்டீரியா, கிருமிகள், அலைபேசியில் ஒட்டிக் கொள்ளும். பின் அதை பயன்படுத்துபவருக்கு வயிற்றுபோக்கு, நுரையீரல் தொற்று உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் ஆபத்துள்ளது என பிரிட்டனின் லீசெஸ்டர் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. டாய்லெட்டில் உள்ள கிருமிகள் எட்டு விநாடிகளில் 5 அடி பரவும். டாய்லெட் பயன்படுத்திவிட்டு 'சோப்' மூலம் கைகளை சுத்தம் செய்தாலும், மீண்டும் அலைபேசியை தொடும்போது 'கை'யில் பரவும். எனவே டாய்லெட்டில் அலைபேசி பயன்பாட்டை கைவிடுவதே சிறந்தது என பரிந்துரைக்கின்றனர்.