‛ஏழு கடல் ஏழு மலை' படத்தில் ஏ.ஐ தொழில்நுட்பம்
ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'. வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து சில வருடங்களைக் கடந்த நிலையில் பல்வேறு நாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் பங்கேற்று வருகிறது.
தற்போது இந்த படத்தை இவ்வருடத்திற்குள் திரைக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் படக்குழு உள்ளனர். ஏற்கனவே இதில் சில கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இப்போது உலகமெங்கும் ஏ.ஐ ஆக்கிரமிப்பு அதிகமாகியுள்ளதால் இதன் தாக்கம் சினிமாவிலும் உள்ளது. இதனால் ராம் மற்றும் படக்குழு அந்த கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மாற்றாக ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட காட்சிகளை இணைத்துள்ளனர். இப்போது படத்துடன் பார்க்கும் போது அவ்வளவு நன்றாக ஏ.ஐ தொழில்நுட்ப சம்மந்தப்பட்ட காட்சிகள் வந்துள்ளது என படத்தை பார்த்தவர்கள் தங்கள் கருத்துக்களை படக்குழுவிற்கு தெரிவித்துள்ளனர்.