Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/கடைசி பருக்கையையும் கொடு!

கடைசி பருக்கையையும் கொடு!

கடைசி பருக்கையையும் கொடு!

கடைசி பருக்கையையும் கொடு!

ADDED : நவ 01, 2011 09:11 AM


Google News
Latest Tamil News
* இறைவனுக்கு பணி செய்ய விரும்புபவர் மக்களுக்கும், உலக உயிர்களுக்கும் பணி செய்ய வேண்டும். ஈசனுக்கு தொண்டு செய்பவரே உத்தமத் தொண்டராவார்.

* ஏழைகளிடமும், பலமற்றவர்களிடமும், நோயுற்றவர்களிடமும் இறைவனைக் காண்பவனே இறைவனை உண்மையாக வணங்குபவனாவான்.

* கோயிலில் இறைவனை வணங்குபவனிடம் அடையும் மகிழ்ச்சியை விட, ஏழைக்கு பணி செய்பவனிடம் இறைவன் அடையும் மகிழ்ச்சி மேலானதாகும்.

* புண்ணியத்தலங்களை தரிசித்தவனிடம் தன்னலம் இருந்தால், இறைவன் அவனிடம் மிகத்தொலைவிலேயே இருப்பான். தன்னலத்தை மறந்து பொதுநலத்துடன் வாழ வேண்டும்.

* மனத்தளர்வு வெற்றிகரமான வாழ்வுக்கு வழிவகுக்காது. உறுதியோடும், இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதுவே மேலான நன்மையை பெறவைக்கும்.

* பிறருக்கு வழங்கவே கையை இறைவன் படைத்தான். பட்டினியாக கிடந்தாலும் கடைசிப் பருக்கையையும் பிறருக்குக் கொடு. பிறருக்கு வழங்குவதால் நீ முழுமையடைவதுடன், தெய்வமாகவும் மாறுவாய்.

-விவேகானந்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us