Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/உழைக்கும் கைகள் வேண்டும்

உழைக்கும் கைகள் வேண்டும்

உழைக்கும் கைகள் வேண்டும்

உழைக்கும் கைகள் வேண்டும்

ADDED : ஏப் 04, 2011 06:04 AM


Google News
Latest Tamil News
* கடவுள் பிரம்மாண்டமான வட்டம் போன்றவர். அந்த வட்டத்தின் சுற்றளவுப் பகுதியான பரிதி எங்கும் கிடையாது. ஆனால், அந்த வட்டத்தின் மையம் அனைத்து இடங்களிலும் உள்ளது.

* எதையும் பரபரப்புடன் செயல்படுத்தக் கூடாது, மாறாக தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இம்மூன்றும் வெற்றிக்கு தேவை.

* நீ ஏற்கனவே தீர்க்கதரிசியாகத் தான் இருக்கிறாய். ஆனால், அதை அறியாமல் இருக்கிறாய். இதை நீ உணர வேண்டும்.

* ஆன்மிக வாழ்க்கைக்கோ, மனதுக்கோ, உடலுக்கோ பலவீனத்தை உண்டு பண்ணும் எதையும் உன் கால்விரலால் கூட தீண்டாதே. மனிதனிடம் இயற்கையாக புதைந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்துவதே சமய வாழ்க்கை.

* இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் நமக்குத் தேவை.

* எல்லாப் பேய்களும் நம் மனதில் தான் இருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கியிருந்தால், எந்த இடத்தில் நாம் இருந்தாலும், எங்கிருந்தாலும் அது சொர்க்கமாக மாறிவிடும்.

-விவேகானந்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us