Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/கொடுப்பவனாக வாழுங்கள்

கொடுப்பவனாக வாழுங்கள்

கொடுப்பவனாக வாழுங்கள்

கொடுப்பவனாக வாழுங்கள்

ADDED : மார் 10, 2011 12:03 PM


Google News
Latest Tamil News
* கையை இறைவன் படைத்தது கொடுப்பதற்கே, நீ பட்டினியாய்க் கிடக்க நேர்ந்தாலும், உன்னிடத்திலுள்ள கடைசிப் பருக்கையையும் பிறருக்குக் கொடுத்துவிடு, அவ்வாறு பிறருக்கு கொடுப்பதாலேயே நீ பூரணமடைவாய், தெய்வமாகவும் ஆவாய்.

* தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன், புறத்தேயுள்ள எதற்கும் வசப்பட மாட்டான். அதன் பின் அவனுக்கு அடிமைத்தனம் எதுவுமில்லை. அவன் மனம் விடுதலை பெற்று விட்டது. அத்தகைய நிலைமை அடைந்தவனே உலகத்தில் நன்றாக வாழக் கூடிய தகுதி பெற்றவனாவான்.

* அன்பைக் கொடு, உதவியைக் கொடு, பணியைக் கொடு. இவ்வாறு உலகில் எப்போதும் கொடுப்பவனாக நிற்க வேண்டும். பதிலுக்கு ஒன்றையும் எதிர்பார்க்கக் கூடாது, இறைவன் நமக்குக் கொடுப்பது போன்று நமது ஈகைக் குணத்தால் நாமும் கொடுப்போம்.

* தூய்மையான மனதைப் பெறுவதுடன் இறைவன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். அவனை

சார்ந்து நிற்க முனைவதுடன் நன்னெறியில் நிற்க வேண்டும்.

- விவேகானந்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us