ADDED : ஆக 30, 2013 03:08 PM

* இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக் கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.
* எழுந்திருங்கள். உழையுங்கள். இவ்வுலகில் நம் வாழ்வு எத்தனை நாள்? இந்த உலகில் தோன்றியதன் அறிகுறியாக வாழ்நாளில் ஏதேனும் சாதித்துவிட்டுச் செல்லுங்கள். அவ்வாறு செய்யாவிடில் மரங்களுக்கும், மனிதர்களுக்கும் என்ன வேறுபாடு?
* வாழ்வில் நன்மை பெற வேண்டுமானால் முதலில் வாழும் தெய்வமாகிய மனித வடிவம் கொண்ட ஒவ்வொருவருக்கும் சேவை செய்து வழிபடுங்கள்.
* தொண்டு செய்ய விரும்பினால், சுயநலம், புகழ், பெருமை, ஆசை இவற்றை மூட்டை கட்டி கடலில் எறிந்து விட்டு வாருங்கள்.
* ஏழைகள், பலமற்றவர்கள், நோயாளிகள் இவர்களிடம் சிவனைக் காண்பவனே, சிவனை உண்மையில் வணங்குபவன் ஆவான்.
- விவேகானந்தர்
* எழுந்திருங்கள். உழையுங்கள். இவ்வுலகில் நம் வாழ்வு எத்தனை நாள்? இந்த உலகில் தோன்றியதன் அறிகுறியாக வாழ்நாளில் ஏதேனும் சாதித்துவிட்டுச் செல்லுங்கள். அவ்வாறு செய்யாவிடில் மரங்களுக்கும், மனிதர்களுக்கும் என்ன வேறுபாடு?
* வாழ்வில் நன்மை பெற வேண்டுமானால் முதலில் வாழும் தெய்வமாகிய மனித வடிவம் கொண்ட ஒவ்வொருவருக்கும் சேவை செய்து வழிபடுங்கள்.
* தொண்டு செய்ய விரும்பினால், சுயநலம், புகழ், பெருமை, ஆசை இவற்றை மூட்டை கட்டி கடலில் எறிந்து விட்டு வாருங்கள்.
* ஏழைகள், பலமற்றவர்கள், நோயாளிகள் இவர்களிடம் சிவனைக் காண்பவனே, சிவனை உண்மையில் வணங்குபவன் ஆவான்.
- விவேகானந்தர்