Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/கொடுப்பவனாக இருங்கள்

கொடுப்பவனாக இருங்கள்

கொடுப்பவனாக இருங்கள்

கொடுப்பவனாக இருங்கள்

ADDED : ஏப் 19, 2011 10:04 AM


Google News
Latest Tamil News
* பக்தி, தியானம், ஒழுக்கம் மூன்றாலும் ஒருவன் தெய்வீக ஞானத்தை அடைய முடியும். வாய்மை என்னும் அடித்தளத்தின் மீது இப்பண்புகள் அமையும்போது, கடவுளை ஒருவன் உறுதியாக அடைந்து விடுவான்.

* உலக வாழ்வு நிரந்தரமானது என்னும் அறியாமை அகன்று விட்டால் பாவம் விலகிவிடும். பாவம் நீங்கினால் ஆசை, சுயநலம் மற்றும் அனைத்து துயரங்களும் நம்மை விட்டு காணாமல் போகும்.

* எப்போதும் கொடுப்பவனாக இருக்கப் பழகுங்கள். அன்பு, உதவி, நல்லெண்ணம், கருணை இவற்றைப் பிறருக்குக் கொடுத்து மகிழுங்கள். பதிலுக்கு பிறரிடமிருந்து எதையும் எதிர்பாராதீர்கள். இறைவன் எப்படி வாரி வழங்குகிறானோ அதுபோல நீங்களும் கொடுத்து வாழுங்கள்.

* மனித வாழ்வில் கடமைகள் துரத்துவதும், வருத்துவதும் உண்மையே. வாழ்வில் சுகங்களும் தேவை என்பதை மறுப்பதற்கில்லை. ஏற்ற குறிக்கோளை மறக்காமல், இருளிலும் ஞான ஒளியை ஏந்திக் கொண்டு முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் வந்தே தீரும்.

- விவேகானந்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us