Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/வேதாத்ரி மகரிஷி/நினைத்தது நடக்கட்டும்!

நினைத்தது நடக்கட்டும்!

நினைத்தது நடக்கட்டும்!

நினைத்தது நடக்கட்டும்!

ADDED : ஜன 04, 2013 09:01 AM


Google News
Latest Tamil News
* மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கும்.

* தன்னைத் தானே தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் மனிதனின் கையில் தான் இருக்கிறது.

* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் எல்லாருக்கும் நன்மை தருபவற்றை மட்டுமே செய்யுங்கள்.

* எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் வந்துவிட்டால் நினைத்ததெல்லாம் நினைத்தபடியே நடக்கும்.

* தேவைகளைப் பெருக்கிக் கொண்டே போக வேண்டாம். எளிமையில் தான் நிம்மதியும், அமைதியும் கிடைக்கும்.

* எந்தச் சூழ்நிலையிலும் ஒருவனிடம் கோபம் உண்டாகவில்லை என்றால், அவன் ஞானம் அடைந்து விட்டான் என்று பொருள்.

* எல்லாப் பொருள்களிடமும், எல்லா உயிர்களிடமும் இறைநிலையைக் காண வேண்டும். அப்படி காணும் அளவுக்கு அறிவுநிலையில் உயர வேண்டும்.

* ஒரு செடியைப் பார்க்கும்போது கூட 'வாழ்க வளமுடன்' என்று வாழ்த்தும்போது அந்தச் செடியின் பலவீனம் நீங்கி நன்கு வளரும்.

- வேதாத்ரி மகரிஷி




      Our Apps Available On




      Dinamalar

      Follow us