Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/வள்ளலார்/நல்ல மனம் வாழ்க!

நல்ல மனம் வாழ்க!

நல்ல மனம் வாழ்க!

நல்ல மனம் வாழ்க!

ADDED : டிச 01, 2013 10:12 AM


Google News
Latest Tamil News
* பிறருடைய பசியைப் போக்குவதோடு நமது கடமை முடிந்து விடுவதில்லை. அவர்களின் துன்பத்தையும் களைய முயற்சிக்க வேண்டும்.

* அரிதான மானிட தேகம் எல்லா உயிர்களுக்கும் கிடைப்பதில்லை. இதைப் பாதுகாத்து திடமாக வைத்துக் கொள்வது நம் கடமை.

* கற்பனை அனைத்தையும் கடந்தவன் இறைவன். அவனை நம் கற்பனை எல்லைக்குள் கொண்டு வர இயலாது.

* அம்பை ஏவி விட்டவனுக்குப் பதிலாக, அம்பையோ, அம்பு செய்து கொடுத்தவனையோ நொந்து கொள்வதால் ஒருபயனும் இல்லை.

* உத்தமர் தம் உள்ளத்தில் கடவுள் பிரணவ ஒளியாக வீற்றிருப்பார். அவர் எண்ணம், சொல், செயல் அனைத்தும் புனிதமானதாக இருக்கும்.

* பிறர் தயவை நாடாமல் மனிதன் வாழ வேண்டும். தன்னை நாடி வருபவர்களுக்கு அள்ளி வழங்கும் நல்ல மனம் பெற்றிருக்க வேண்டும்.

- வள்ளலார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us