Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/வள்ளலார்/பசித்தவர்க்கு உணவளியுங்கள்

பசித்தவர்க்கு உணவளியுங்கள்

பசித்தவர்க்கு உணவளியுங்கள்

பசித்தவர்க்கு உணவளியுங்கள்

ADDED : அக் 04, 2010 08:10 PM


Google News
Latest Tamil News
* கடவுள் ஒருவரே. அவரே அருட்பெருட்ஜோதியாகத் திகழ்கிறார். தனிப்பெருங்

கருணையோடு நம்மைக் காத்தருள்கிறார்.

* உயிர்க்கொலை செய்வதும், அவ்வுயிர்

களின் புலாலைப் புசிப்பதும் அறவே கூடாது.

* கண்ணில் காணும் உயிர்களை எல்லாம்

தன்னுயிராக மதித்து வாழ்வதே ஆன்மநேய ஒருமைப்பாடு ஆகும். இதை எல்லா மக்களும்

கடைபிடிக்க வேண்டும்.

* ஏழைகளின் பசிப்பிணி போக்குவதே ஜீவகாருண்யம். இந்த ஒழுக்கம் ஒன்றே பேரின்ப வீட்டின் திறவுகோல். பசித்த வயிறுக்கு உணவளித்தவன் பெரும்

புண்ணியத்தை அடைவான். நோய்நொடிகள் அவனை விட்டு விலகும். நீண்ட ஆயுள் உண்டாகும்.

* எதற்காகவும் கோபம் கொள்வதோ, பொய் சொல்வதோ, பிறர் நலன் கண்டு பொறாமை கொள்வதோ கூடாது.

உரத்துப்பேசுவது, விவாதம் செய்வது, வழக்கிடுவது, பிறரிடம் சண்டையிடுவது கூடாது.

* பதட்டம் கொள்வதால் பிராணவாயு அதிகமாகச்

செலவாகும். எனவே, எச்செயலையும் நிதானத்துடன் அணுகுவதே சிறந்தது.

வள்ளலார்

(இன்று வள்ளலார் பிறந்ததினம்)  





      Our Apps Available On




      Dinamalar

      Follow us