Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/கேளுங்க மாணவர்களே!

கேளுங்க மாணவர்களே!

கேளுங்க மாணவர்களே!

கேளுங்க மாணவர்களே!

ADDED : அக் 09, 2008 09:49 AM


Google News
Latest Tamil News
<P>பொருள் சம்பாதிப்பதற்கான வழிவகைகளைத் தேடுவதே இன்றைய கல்வியின் நோக்கமாக இருக்கிறது. மாணவனை ஒழுக்கமுடையவனாகவும், ஆன்மிக எண்ணம் உடையவனாகவும் மாற்றும் வகையில் கல்வித்தரம் அமைய வேண்டும்.<BR>கல்வி என்பது மனிதவாழ்வின் முக்கிய அம்சங்களாக ஒழுக்கம், அன்பு, தூய்மை, சகிப்புத்தன்மை, தைரியம், வாய்மை, அடக்கம், சேவை, தியாகம் ஆகிய உயர்பண்புகளை வளர்க்கும் விதத்தில் அமைய வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் ஒழுக்கபோதனை வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். படிப்பு முடிந்த பின்பும் மாணவ வாழ்க்கை முடிந்து விட்டதாக எண்ணக்கூடாது. மனிதன் வாழ்வின் இறுதிவரை மாணவர்களாக இருந்து வரவேண்டும். நல்ல விஷயங்களை கேட்பதற்கு மாணவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். உள்ளக்கட்டுப்பாடு என்பது மாணவ பருவத்தில் மிகவும் முக்கியமான ஒன்று. சுயகட்டுப்பாட்டினை மாணவப் பருவத்தில் கடைபிடிப் பவர்கள் வாழ்வில் ஈடுபடும் போது நல்ல சமுதாயத்திற்கு வாய்ப்பாக அமைகிறது. மாணவர் வாழ்வில் ஆசிரியரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஆசிரியர்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக இருந்தால் மட்டுமே மாணவர்களை நல்லமுறையில் வழிநடத்த இயலும்.</P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us