
<P><STRONG>மண்ணுலகில் விண்ணுலகம்</STRONG></P>
<P>வெறுப்பு இருபுறமும் வெட்டுகின்ற வாளினைப் போன்றது. உன் எதிரியை தாக்கத் தவறினால் சீற்றத்துடன் திரும்பி வந்து தன்னை அனுப்பியவனையே அழிக்கும் தன்மையுடையது. சூனியக்காரர்களின் மந்திர சக்தியைப் போன்றது. அதனால், வெறுப்பினை மறந்து விருப்பமாகிய அன்பினை வளர்த்துக் கொள்ளுங்கள். பகைவனை தாக்கும் போது அவனுள்ளிருக்கும் இறைவன் மீது அன்பு செலுத்துங்கள். அப்போது உங்கள் இருவருக்கும் இடையே நரகம் கிடையாது.மன்னிக்க முடியாத குற்றங்களாக இருப்பவை கொடுமையும், அற்பத்தனமும் தான். </P>
<P>இவை இரண்டும் எங்கும் பரவி குற்றங்களை உண்டுபண்ணுகின்றன. பிறரை வெறுக்கும் குணமுடையவர்கள், முதலில் தங்களிடமுள்ள இத்தீய குணங்களை ஒழித்துக்கட்ட முயற்சி செய்ய வேண்டும். பெருந்தன்மையையும், தாராளமனப் பான்மையையும் வளர்த்துக் கொண்டால் மனிதன் விண்ணுலகத்தையே மண்ணுலகிற்கு கொண்டுவர இயலும்.* வெற்றி தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் தோல்வியடைந்தேன் என்று யாரும் குறைபட்டுக்கொள்ளத் தேவையில்லை. வெற்றிக்கான பாதையில் தான் நாம் அனைவரும் சென்று கொண்டிருக்கிறோம். வெற்றி சிலருக்கு கொஞ்சம் தாமதமாக கிடைக்கிறது, சிலர் வெற்றியை நோக்கி சுற்றிவளைத்து செல்வதால் தாமதமாகிறது.</P>
<P> <STRONG> -அரவிந்தர்</STRONG></P>
<P>வெறுப்பு இருபுறமும் வெட்டுகின்ற வாளினைப் போன்றது. உன் எதிரியை தாக்கத் தவறினால் சீற்றத்துடன் திரும்பி வந்து தன்னை அனுப்பியவனையே அழிக்கும் தன்மையுடையது. சூனியக்காரர்களின் மந்திர சக்தியைப் போன்றது. அதனால், வெறுப்பினை மறந்து விருப்பமாகிய அன்பினை வளர்த்துக் கொள்ளுங்கள். பகைவனை தாக்கும் போது அவனுள்ளிருக்கும் இறைவன் மீது அன்பு செலுத்துங்கள். அப்போது உங்கள் இருவருக்கும் இடையே நரகம் கிடையாது.மன்னிக்க முடியாத குற்றங்களாக இருப்பவை கொடுமையும், அற்பத்தனமும் தான். </P>
<P>இவை இரண்டும் எங்கும் பரவி குற்றங்களை உண்டுபண்ணுகின்றன. பிறரை வெறுக்கும் குணமுடையவர்கள், முதலில் தங்களிடமுள்ள இத்தீய குணங்களை ஒழித்துக்கட்ட முயற்சி செய்ய வேண்டும். பெருந்தன்மையையும், தாராளமனப் பான்மையையும் வளர்த்துக் கொண்டால் மனிதன் விண்ணுலகத்தையே மண்ணுலகிற்கு கொண்டுவர இயலும்.* வெற்றி தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் தோல்வியடைந்தேன் என்று யாரும் குறைபட்டுக்கொள்ளத் தேவையில்லை. வெற்றிக்கான பாதையில் தான் நாம் அனைவரும் சென்று கொண்டிருக்கிறோம். வெற்றி சிலருக்கு கொஞ்சம் தாமதமாக கிடைக்கிறது, சிலர் வெற்றியை நோக்கி சுற்றிவளைத்து செல்வதால் தாமதமாகிறது.</P>
<P> <STRONG> -அரவிந்தர்</STRONG></P>