Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/மனதைக்கட்ட என்ன வழி?

மனதைக்கட்ட என்ன வழி?

மனதைக்கட்ட என்ன வழி?

மனதைக்கட்ட என்ன வழி?

ADDED : அக் 11, 2010 07:10 PM


Google News
Latest Tamil News


* நாம் ஒவ்வொரு நாளையும் கடக்கும் போது வாழ்நாளில் ஒருநாளை விட்டு விடுகிறோம். காலம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. காலம் என்னும் தத்துவத்தைக் கடந்து நிற்பவர் கடவுள். காலம் முடிவதற்குள் கடவுள் பக்கம் மனதைத் திருப்ப முயலுங்கள்.

* வாழ்க்கையை ஒரு சத்திய சோதனையாக எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணம், வாக்கு, செயல் மூன்றிலும் உண்மையைக் கடைபிடியுங்கள். அப்போது சாந்தமும், தர்மமும், சவுபாக்கியமும் தானாக உங்களைத் தேடி வந்துவிடும்.

* மீண்டும் மனிதப்பிறவி நமக்கு கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம். அதனால் கிடைத்த பிறவியைப் பயனுடையதாக்கிக் கொள்வது நம் கடமை.

* மனதின் இயல்பு அமைதியற்று இருப்பது தான். ஒரு கணம் மனதால் சும்மா இருக்க முடியாது. சலனப்படும் மனதை கட்டுவதற்கு எளிதான ஒன்று தான் இருக்கிறது. அது கடவுளுடைய நாமத்தை இடைவிடாமல் ஜபிப்பதாகும். இதனால் மனம் ஒருமுகப்படத் தொடங்கும்.

சாய்பாபா 




      Our Apps Available On




      Dinamalar

      Follow us