Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/கைக்கு அழகு எது?

கைக்கு அழகு எது?

கைக்கு அழகு எது?

கைக்கு அழகு எது?

ADDED : செப் 11, 2013 10:09 AM


Google News
Latest Tamil News
* உங்களுக்கு கிடைத்ததை பிறருக்கும் பகிர்ந்து கொடுத்து உண்ணுங்கள். வாங்குவதோடு பிறருக்கு கொடுத்து மகிழவே கடவுள் நமக்கு கைகளைக் கொடுத்திருக்கிறார்.

* கைகளின் அழகு, அணிந்திருக்கும் ஆபரணங்களில் இல்லை. அள்ளிக் கொடுப்பதில் தான் இருக்கிறது.

* தனித்து வாழ விரும்பாதீர்கள். ஒதுங்கி இருப்பதால் மனம் சோர்வடைந்து விடும். மனம் விட்டுப் பழகுங்கள். ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ்ந்தால் உறவு பலப்படும்.

* சரணாகதி என்பது நம்முடைய செயல்களை கடவுள் பார்த்துக் கொள்வார் என்று விட்டுவிடுவது அல்ல. நமக்குள் இருக்கும் கடவுளை உணர்ந்து, அகந்தை உணர்வு இல்லாமல் வாழ்வதே சரணாகதி.

* கடவுளின் கருவியாக வாழுங்கள். அவர் நம்முடன் எப்போதும் இருக்கிறார் என்பதை உணருங்கள்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us