Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/புண்ணியமே சிறந்த பாதுகாப்பு

புண்ணியமே சிறந்த பாதுகாப்பு

புண்ணியமே சிறந்த பாதுகாப்பு

புண்ணியமே சிறந்த பாதுகாப்பு

ADDED : டிச 31, 2011 12:12 PM


Google News
Latest Tamil News
* கற்களில் செதுக்கப்பட்ட சிலைகளில் கடவுளைக் காண வேண்டும். கடவுளைக் கல்லாக்க முயலக்கூடாது.

* சூரியனை பார்க்க விளக்கை எடுத்துச் செல்வதில்லை. அதன் ஒளியிலேயே சூரியனை பார்க்கிறோம். அதுபோல,

கடவுளைக் காண பிற சாதனங்களைவிட அருள் தான் தேவை.

* பிரார்த்தனை உதட்டிலிருந்து வரக்கூடாது. நெஞ்சிலிருந்து வரவேண்டும். அதுவும் தனக்காகச் செய்யப்படாமல், பிறருக்காகச் செய்யப்பட வேண்டும்.

* கண்பார்வையும், கண்களும் சுற்றியுள்ள பொருளை பார்ப்பதற்காக மட்டுமல்ல. இறைவனைக் காண்பதற்கே கொடுக்கப்பட்டுள்ளன.

* மேகம் கலையும் வரை காத்திருந்தால் தான், சூரிய ஒளியைக் காணமுடியும், அதுபோல் அறியாமை அகலும் வரை பொறுமையாக பிரார்த்தனை செய்தால் தான் இறையருள் கிட்டும்.

* ஒருவர் சேர்த்த செல்வம் வறுமைக் காலத்தில் பாதுகாப்பு தரும். நாம் செய்த புண்ணியம் துன்பங்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

- சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us