Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/மவுனம் நல்ல பழக்கம்

மவுனம் நல்ல பழக்கம்

மவுனம் நல்ல பழக்கம்

மவுனம் நல்ல பழக்கம்

ADDED : ஏப் 30, 2013 11:04 AM


Google News
Latest Tamil News
* உங்கள் மனதை மலராக்கிக் கொள்ளுங்கள். அதிலிருந்து நறுமணம் நாலாபுறமும் மவுனமாகப் பரவட்டும்.

* கண்ணை இமை காப்பது போல கடவுள் நம்மை எந்நேரமும் காத்தருள்கிறார் என்பதை பூரணமாக நம்புங்கள்.

* அன்பே சிவம். சிவமே அன்பு. அன்புள்ள இடத்தில் ஆண்டவனின் அருளாட்சி நடக்கிறது.

* 'தான்' என்னும் எண்ணம் கடவுளைச் சரணாகதி அடைவதற்கு மிகப் பெரிய தடையாகும்.

* மவுனமாக இருப்பது நல்லது. ஒரேயடியாக அது முடியாவிட்டாலும், பேச்சில் நிதானத்தையாவது பின்பற்றுங்கள்.

* சிதறிக்கிடக்கும் மனதை ஒருமுகப்படுத்தும் சக்தி தியானத்திற்கு உண்டு. அலைபாயும் மனம் தியானத்தால் கட்டுப்படும்.

* நல்ல செயல்களை இன்றே செய்யத் தொடங்குங்கள். கடவுளின் அருளால் தக்க சமயத்தில் தேவையான உதவிகள் நிச்சயம் கிடைக்கும்.

* எந்த விஷயமும் காய் நிலையிலேயே இருப்பதில்லை. பொறுமையும், விடாமுயற்சியும் இருந்தால் காயும் ஒருநாள் கனிந்துவிடும்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us