Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/மனம் தங்கம் போலத்தான்

மனம் தங்கம் போலத்தான்

மனம் தங்கம் போலத்தான்

மனம் தங்கம் போலத்தான்

ADDED : ஜூன் 25, 2009 09:16 AM


Google News
Latest Tamil News
<P>! <BR>

<P>* கடவுள் நம் தாயைப் போன்றவர். தாய் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாள். ஒரு சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கெட்டவர்களாக மாறிவிடுகின்றன. அதற்காகத் தாய் மனம் சலிப்பதில்லை. கெட்ட குழந்தைகளையும் நல்லவர் களாகத் திருத்தவே முயல்கிறாள்.<BR>

<P>* குழந்தை தெருவில் விளையாடி விட்டு சட்டையை அழுக்காக்கிக் கொண்டு திரும்பினாலும், தாய் அன்பினால் மீண்டும் நல்ல சட்டையைப் போட்டு விட்டு அழகு பார்க்கிறாள். அதுபோல, வாழ்வில் பலவிதமான அனுபவங்களைக் கொடுத்து கடவுளும் தாய் போல நம்மை திருத்தி அழகு பார்க்கிறார்.<BR>

<P>* மழைநீர் போல் கடவுள் மனிதனைத் தூய்மையாகப் படைத்தார். ஆனால் அந்நீர் சேரும் இடத்திற்கேற்ப தன்மையைப் பெறுகிறது. மனிதனும் வாழ்கின்ற சூழ் நிலைக்கேற்ப நல்லவிதமான அல்லது தீய குணநலன் களைப் பெறுகிறான். <BR>

<P>* மாசு படிந்திருந்தால் தங்கத்தை எறிந்து விடுவதில்லை. அழுக்கை நீக்கினால், தங்கம் தனக்கான மதிப்பைப் பெறுகிறது. மனமும் தங்கம் போலத் தான்!. அதை கடவுளிடம் சமர்ப்பித்தால் அவர் நம் மன அழுக் கினைப் போக்கி அருள் செய்வார்.<BR>

<P>&nbsp;</P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us