Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/நற்பண்பைக் கடைபிடிப்போம்

நற்பண்பைக் கடைபிடிப்போம்

நற்பண்பைக் கடைபிடிப்போம்

நற்பண்பைக் கடைபிடிப்போம்

ADDED : மார் 05, 2012 01:03 PM


Google News
Latest Tamil News
* ஆசைகளை இறைவனிடம் அர்ப்பணித்துவிட்டு, மனதை சமநிலையில் வைக்க அமைதி தரும் பழக்கத்தை கொள்ளுங்கள். திட்டுபவர்களை புன்னகையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.

* நீராடல், நல்ல உடை, தூய உணவு, தூய சூழ்நிலை ஆகியவை புறத்தூய்மையை அளிக்கும். சுயநலம் இல்லாத சேவை உள்ளத் தூய்மையை அளிக்கும்.

* கட்டுப்பாடான வாழ்க்கை, நல்லொழுக்கம், பிறரிடம் காட்டும் அன்பு, ஜீவன்களிடம் காட்டும் கருணை இவற்றால் நம்முடைய மனதுக்கு கிடைக்கும் மனநிறைவே சொர்க்கம்.

* மனிதன் தன்னைத் தெய்வ வடிவமாக உணர வேண்டும். மனித வடிவம் என எண்ணி மயங்கக் கூடாது.

* வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் என்ன என்பதை முதலில் ஆலோசிக்க வேண்டும். புனிதமான மனித வாழ்க்கையில் தூய்மையற்ற செயல்களை செய்து, வாழ்நாளை வீணாக்கக் கூடாது.

* இறைவன் நம்மிடம் இருக்கிறார் என்பதால், நல்லொழுக்கத்துடன் வாழ வேண்டும். நற்பண்புகள் கொண்ட ஒழுக்கமான வாழ்க்கை மிக முக்கியம்.

- சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us