Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/இறுதிவரைக்கும் போராடு!

இறுதிவரைக்கும் போராடு!

இறுதிவரைக்கும் போராடு!

இறுதிவரைக்கும் போராடு!

ADDED : செப் 03, 2012 09:09 AM


Google News
Latest Tamil News
* மனித மனத்தை சீர்படுத்தி தூய்மை ஆக்காவிட்டால், உலகை சீர்படுத்த எடுக்கும் திட்டங்கள் அனைத்தும் பயனற்றதாகி விடும்.

* கடவுள் கொடுப்பதை அழிக்கமுடியாது. மனிதன் கொடுப்பதை பாதுகாக்க முடியாது.

* தன் கடமையைச் சமுதாயத்திற்கு வெளிக்காட்ட மட்டுமே மனிதன் முயற்சிக்க வேண்டும்.

* தன்னம்பிக்கையே கடவுள் நம்பிக்கைக்கு அடிப்படையாகும்.

* சந்தேகப்படுவது எளிது; நம்பிக்கை கொள்வது கடினமானது.

* கடவுளின் உதவியையும் அரவணைப்பையும் விரும்பும் மனிதன், முதலில் தன்னை தூய்மைப்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

* குற்றம் செய்வது இயற்கையானது என்று எண்ணுவதே பெரிய குற்றமாகும்.

* ஆசிரியர் சொல்வதைப் பின்பற்று, தீமையை எதிர்கொள், இறுதி வரை போராடு, விளையாட்டை ரசித்து முடி.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us