Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/பயப்படாதே! பயமுறுத்தாதே!

பயப்படாதே! பயமுறுத்தாதே!

பயப்படாதே! பயமுறுத்தாதே!

பயப்படாதே! பயமுறுத்தாதே!

ADDED : மே 04, 2012 08:05 AM


Google News
Latest Tamil News
* பிரார்த்தனை உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தில் இருந்து வரும்போது தான் முழுமையானதாக இருக்கும்.

* கடவுள் சத்தியத்தின் வடிவம். எனவே, உண்மையைப் பின்பற்றினால் மட்டுமே அவரது அருளுக்குப் பாத்திரமாக முடியும்.

* செல்வம், அதிகாரம், பட்டம், பதவி எதுவும் நமக்கு நிலையானது அல்ல. என்றென்றும் உலகில் நிலையானவர் கடவுள் மட்டுமே. அவர் மீது பற்று வையுங்கள்.

* மக்கள் சேவையில் ஈடுபடும் போது இதயம் தூய்மையானதாகவும், அனைவரும் சமம் என்ற பரந்த மனப்பான்மை கொண்டதாகவும் இருக்கவேண்டும்.

* எங்கும் தேடி அலையத் தேவையில்லை. கனிவான பார்வையால் கண்களை விசாலமாக்குங்கள். உங்கள் கண் முன் இறைவன் வீற்றிருப்பதை உணர்வீர்கள்.

* யாரிடமும் எதற்காகவும் பயப்படாதீர்கள். அதேசமயம் யாரையும் பயப்படும்படிச் செய்யவும் கூடாது.

* சுயநலத்துடன் எதையும் அணுகாதீர்கள். தியாக மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். மனம் எப்போதும் அமைதியில் திளைத்திருக்கட்டும்.

சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us