Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாரதாதேவியார்/இளமையிலேயே கடமையாற்றுங்கள்

இளமையிலேயே கடமையாற்றுங்கள்

இளமையிலேயே கடமையாற்றுங்கள்

இளமையிலேயே கடமையாற்றுங்கள்

ADDED : அக் 27, 2010 02:10 AM


Google News
Latest Tamil News
* யாருடைய குற்றங்களையும் காணாதே. பிறரது குற்றங்களைக் காணத்

தொடங்கினால் அதுவே கடைசியில்

உங்கள் இயல்பாகிவிடும்.

* மனித உடம்பு நிலையற்றது. இப்போது இருக்கிறது. ஆனால், அடுத்த கணம்

இல்லாமல் போய்விடும். அதற்குள் உன்னால் முடிந்த நல்ல செயல்களைச் செய்வது மேலானது.

* சாதனை ஆகட்டும். தவமாகட்டும். தீர்த்த யாத்திரை ஆகட்டும். பணம் சம்பாதிப்பது ஆகட்டும். எந்த நல்ல செயலையும் செய்வதென்று தீர்மானித்து விட்டால் அதை இளமையிலேயே செய்துவிடுங்கள்.

* ஆசையின் சாயலே நம் மனதில் அற்றுப் போக

வேண்டும். அப்போது தான் பிறவியில் இருந்து

விடுதலை கிடைக்கும். 

* நீங்கள் ஒரு நற்பணி செய்தால், அதனால் உங்கள்

பாவச்சுமை விலகும். தியானம், ஜபம், தெய்வீகச்

சிந்தனை இவற்றால் பாவம் குறைவதோடு புண்ணிய

பலன் நம்மை வந்தடையும்.

* யார் என்ன சொன்னாலும், மனதிற்குச் சரியென்று

பட்டதை துணிவோடு செய்து முடியுங்கள். நிச்சயம்

கடவுளின் துணை உங்களுக்கு கைகொடுக்கும்.

-சாரதாதேவியார்  




      Our Apps Available On




      Dinamalar

      Follow us