Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாரதாதேவியார்/சுறுசுறுப்பாக இருங்கள்!

சுறுசுறுப்பாக இருங்கள்!

சுறுசுறுப்பாக இருங்கள்!

சுறுசுறுப்பாக இருங்கள்!

ADDED : டிச 19, 2012 10:12 AM


Google News
Latest Tamil News
* நம்பிக்கையும், மனஉறுதியும் நம் வாழ்விற்கு அடிப்படை. இவை இரண்டும் இருந்தால் வாழ்வில் எல்லாமே இருந்த மாதிரி தான்.

* இறைவனை நேசிப்பவனுக்கு துன்பம் கிடையாது. எப்போதும் இறை சிந்தனையில் இருப்பவன் புண்ணியவான்.

* தவறுவது மனித இயல்பு தான். அதைப் பெரிதாக எண்ண வேண்டாம். அதனை மீண்டும் மீண்டும் நினைப்பதால் தான் துன்பம் உண்டாகிறது.

* உங்களுக்கு மன அமைதி வேண்டுமானால் பிறர் குற்றங்களைக் காணாதீர்கள். மாறாக உங்களது குற்றங்குறைகளை எண்ணிப் பாருங்கள்.

* யாராவது ஒரு உயிர்க்கு மகிழ்ச்சியை உன்னால் கொடுக்க முடியுமானால் உன் வாழ்வின் லட்சியம் நிறைவேறி விட்டதாக அர்த்தம்.

* சோம்பலாக இருப்பதால் உடல் மட்டுமில்லாமல் மனமும் கெட்டுப் போய் விடும். அதனால் எப்போதும் சுறுசுறுப்பாய் பணியில் ஈடுபடுங்கள்.

- சாரதாதேவியார்

(இன்று சாரதாதேவியார் பிறந்த தினம்)




      Our Apps Available On




      Dinamalar

      Follow us