ADDED : செப் 11, 2013 10:09 AM

* எந்த செயலில் ஈடுபட்டாலும், அதை முழுமையாக கடவுளிடம் அர்ப்பணித்து விடுங்கள். அப்போது பாவ, புண்ணியம் உங்களைத் தீண்டாது.
* அனைவரிடமும் பணிவுடன் பழகுங்கள். அகங்காரம் என்னும்கொடிய குணம் உங்களை நெருங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* உலகத்தை திருத்த விரும்பினால், முதலில் உங்களை திருத்திக் கொள்ளுங்கள்.
* அவரவர் கடமையில் தவறாமல் ஒழுங்குடன் நடந்தால் உலகமே நன்மை பெற்று விடும்.
* பிடிவாதத்தை கைவிடுங்கள். பிடிவாதக்காரன் தனக்குத் தானே தீங்கு இழைத்துக் கொள்கிறான்.
* சாந்தியும், மனத்தெளிவும் வேண்டுமானால் நேர்மை மிகவும் அவசியம். உண்மையான பக்தன் என்பவன் நெறிபிறழாத நேர்மை நெஞ்சம் பெற்றிருப்பான்.
* நான் கடவுளுடைய குழந்தை என்று சொன்னால் போதாது. குழந்தை உள்ளத்துடன் வாழ்வதே முக்கியம்.
- சாந்தானந்தர்
* அனைவரிடமும் பணிவுடன் பழகுங்கள். அகங்காரம் என்னும்கொடிய குணம் உங்களை நெருங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* உலகத்தை திருத்த விரும்பினால், முதலில் உங்களை திருத்திக் கொள்ளுங்கள்.
* அவரவர் கடமையில் தவறாமல் ஒழுங்குடன் நடந்தால் உலகமே நன்மை பெற்று விடும்.
* பிடிவாதத்தை கைவிடுங்கள். பிடிவாதக்காரன் தனக்குத் தானே தீங்கு இழைத்துக் கொள்கிறான்.
* சாந்தியும், மனத்தெளிவும் வேண்டுமானால் நேர்மை மிகவும் அவசியம். உண்மையான பக்தன் என்பவன் நெறிபிறழாத நேர்மை நெஞ்சம் பெற்றிருப்பான்.
* நான் கடவுளுடைய குழந்தை என்று சொன்னால் போதாது. குழந்தை உள்ளத்துடன் வாழ்வதே முக்கியம்.
- சாந்தானந்தர்