Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ரமணர்/நீங்கள் தான் பலசாலி

நீங்கள் தான் பலசாலி

நீங்கள் தான் பலசாலி

நீங்கள் தான் பலசாலி

ADDED : அக் 10, 2013 05:10 PM


Google News
Latest Tamil News
* உண்மையில், நாம் அனைவரும் கடவுளின் சிறுகருவியே. இந்த எண்ணத்துடன் கடமையாற்றினால் ஆணவத்திற்கு இடமிருக்காது.

* உயிர்கள் அனைத்தும் அருளின் வடிவங்களே. அருளின் உச்சவடிவம் மவுனமே. அதுவே உயர்ந்த உபதேசமும் கூட.

* பிரார்த்தனை என்பது வெறும் சொற்கள் அன்று. அது இதயத்திலிருந்து புறப்பட்டு, இதயத்திற்குள்ளேயே கலந்து விட வேண்டும்.

* அகந்தை கொண்ட மனிதர்கள் எல்லாச் செயல்களையும் நாமே செய்கிறோம் என்று தவறான எண்ணத்துடன் வாழ்கிறார்கள்.

* 'நான் யார்' என்ற கேள்வியை உன்னிடம் நீயே கேட்டு கொள். பதிலைத் தேடிப் புறப்பட்டுச் செல். வழி புலப்படத் தொடங்கும்.

* உலகில் யாரும் பலமற்றவரோ, கெட்டவரோ கிடையாது. இப்படி நினைப்பது தான் பெரிய தவறு.

- ரமணர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us