Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ரமணர்/அகந்தை அகலட்டும்

அகந்தை அகலட்டும்

அகந்தை அகலட்டும்

அகந்தை அகலட்டும்

ADDED : டிச 22, 2010 07:12 PM


Google News
Latest Tamil News
* நெருப்பின் சுடரிலிருந்து பொறிகள்

எழுகின்றன. ஆனால், அவை வெளியில் சிதறி விழுகின்றன. ஆனால், நாம் ஒரு போதும் கடவுளுக்கு வெளியில் இல்லை.

* சிவனடியில் முழுமையாகச் சரணடைந்துவிட்டால் நிறைந்த அமைதி கிடைப்பதுடன் ஆன்ம உணர்வு கிடைக்கிறது.

* இதயத்தில் இருக்கும் அகந்தை விலகுதலே சரணாகதி

ஆகும். கடவுள் வெளிப்புறச் செயல்களால்

ஏமாறுவதில்லை, அவர் காண்பதெல்லாம் அகந்தை, எந்த அளவுக்குப் பாக்கி இருக்கிறது என்பதும், அதனை எந்த அளவில் அழிக்கலாம் என்பதுமேயாகும்.

* தெய்வீகம் அனைத்துக்காலங்களிலும் அனைத்து

சூழல்களிலும் பரவி நிற்கிறது. தனி மனிதர் தன்

விருப்பம் போல் நடக்க முடியாது, தெய்வீகத்தின்

சக்தியை உணர்ந்து நடக்க வேண்டும்.

* கடவுள் அல்லது குருவிடம் ஒருவர் சரணடைந்து

விட்டால், அவர் சரணடைந்த சக்தியே அவரைச் சரியான பாதையில் அழைத்துச் செல்கிறது. கடவுள் அல்லது குருவை நம்பாத போது தான் சந்தேகம் எழுகிறது.

- ரமணர்

(நாளை ரமணர் அவதார தினம்)




      Our Apps Available On




      Dinamalar

      Follow us