ADDED : ஜூலை 19, 2013 10:07 AM

* கடவுள் நமக்கு மிக அருகிலேயே இருக்கிறார். ஆனால், நம்பிக்கை இருந்தால் மட்டுமே அவரைத் தரிசிக்க முடியும்.
* பொன், பெண், மண் ஆகிய மூவாசைக்கு மனதில் இடம் கொடுத்தால் ஆன்மிக யோகம் ஒருபோதும் கைகூடாது.
* கடவுளே உலகின் ஒரே எஜமானர். நாம் அனைவரும் அவரின் பணியாளர்கள். அவருக்கு பணிவிடை செய்வது தான் பிறவிப்பயன்.
* ஆராய்ச்சி அறிவால் கடவுள்தரிசனத்தைப் பெற முடியாது. அசைக்க முடியாத நம்பிக்கை ஒன்றே தேவை.
* தீயவாசனை மனதில் இருக்கும் வரையில் தூய்மையான பக்தி உண்டாகாது. பக்தி செலுத்துவதே வாழ்வின் சாராம்சம்.
* உருவமற்ற கடவுளை தியானம் செய்வது மிகக் கடினமான செயல். அதற்காகவே உருவநிலையில் வழிபாடு செய்கிறோம்.
* கள்ளம் கபடமில்லாத மனம் படைத்தவர்கள் கடவுளின் அருளை எளிதில் பெற்று மகிழ்கிறார்கள்.
* பேராசை, காமம், கோபம் போன்ற துர்க்குணங்கள் கடவுளை அறிந்த பிறகே நம்மை விட்டு அகலும்.
- ராமகிருஷ்ணர்
* பொன், பெண், மண் ஆகிய மூவாசைக்கு மனதில் இடம் கொடுத்தால் ஆன்மிக யோகம் ஒருபோதும் கைகூடாது.
* கடவுளே உலகின் ஒரே எஜமானர். நாம் அனைவரும் அவரின் பணியாளர்கள். அவருக்கு பணிவிடை செய்வது தான் பிறவிப்பயன்.
* ஆராய்ச்சி அறிவால் கடவுள்தரிசனத்தைப் பெற முடியாது. அசைக்க முடியாத நம்பிக்கை ஒன்றே தேவை.
* தீயவாசனை மனதில் இருக்கும் வரையில் தூய்மையான பக்தி உண்டாகாது. பக்தி செலுத்துவதே வாழ்வின் சாராம்சம்.
* உருவமற்ற கடவுளை தியானம் செய்வது மிகக் கடினமான செயல். அதற்காகவே உருவநிலையில் வழிபாடு செய்கிறோம்.
* கள்ளம் கபடமில்லாத மனம் படைத்தவர்கள் கடவுளின் அருளை எளிதில் பெற்று மகிழ்கிறார்கள்.
* பேராசை, காமம், கோபம் போன்ற துர்க்குணங்கள் கடவுளை அறிந்த பிறகே நம்மை விட்டு அகலும்.
- ராமகிருஷ்ணர்