Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ராமகிருஷ்ணர்/ஊரெல்லாம் தேடிய கதை

ஊரெல்லாம் தேடிய கதை

ஊரெல்லாம் தேடிய கதை

ஊரெல்லாம் தேடிய கதை

ADDED : செப் 09, 2011 10:09 AM


Google News
Latest Tamil News
* ஓம் என்பது பிரணவ மந்திரத்தை ஓசை அனைத்தும் அடங்கிய நிலையில் கேட்க முடியும். யோக சாஸ்திரம்

கூறும் மூச்சுப்பயிற்சியால் உண்டாகும் நற்பலனை பிரணவ மந்திரம் உச்சரிப்பதால் ஒருவன் பெற முடியும்.

* மூச்சுப்பயிற்சியில் மூச்சை உள்ளே இழுத்து வெளி விடுவதைப் போன்று, 'ஓம்' என்று உச்சரிக்கும் போது, நம் வயிற்றுத்தசை அனைத்தும் சுருங்கி உள்ளே செல்வதைப் பார்க்கலாம். இப்பிரணவ மந்திரத்தின் மகத்துவத்தை உணர்ந்து சொல்பவர்களுக்கு மனம் ஒருநிலைப்படும்.

* வேதங்கள் காயத்ரி மந்திரத்தில் ஒன்றி விடுகின்றன. காயத்ரி மந்திரம் 'ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தில் கலந்து விடுகிறது. 'ஓம்' கடைசியில் சமாதியில் சேர்ந்து விடுகிறது.

* கடவுள் உனக்குள்ளேயே இருக்கிறார். ஆனால், நீ அவரைத்தேடி எங்கெல்லாமோ அலைகிறாய். இடுப்பில் பிள்ளையை வைத்துக் கொண்டு, ஊரெல்லாம் தேடிய கதையாகத் தான் கடவுளை தேடுவது இருக்கிறது.

- ராமகிருஷ்ணர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us