Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/நன்றிக்கடன் செலுத்துங்கள்

நன்றிக்கடன் செலுத்துங்கள்

நன்றிக்கடன் செலுத்துங்கள்

நன்றிக்கடன் செலுத்துங்கள்

ADDED : பிப் 11, 2013 02:02 PM


Google News
Latest Tamil News
* குடும்பத்தினரைக் காப்பாற்ற பிச்சை எடுக்காமல் உழைத்துப் பொருள் சம்பாதிப்பவர் ஒளிப்பிரகாசம் நிறைந்த முகத்துடன் மறுமையில் அல்லாஹ்வை சந்திப்பார்.

* எவரேனும் ஒருவர் சத்தியம் செய்தால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும் அல்லது மவுனமாக இருக்கட்டும்.

* பாவங்களைச் செய்வதற்கு தூண்டுகோலாக இருப்பது பேராசையே. பேராசையும் அல்லாஹ்வின் நேசமும் ஒரே நெஞ்சத்தில் ஒன்று சேர்வதில்லை.

* உங்களுக்கு உணவு கொடுத்தவருக்கு நல்லருளும் அபிவிருத்தியும் உண்டாவதற்கு துஆ செய்யுங்கள். அதுவே உணவு அளித்தவருக்கு நீங்கள் செய்யும் நன்றிக் கடன்.

* பெற்றோர் தனக்கு அநியாயம் செய்தாலும் அவர்களிடம் பிள்ளைகள் அன்பைச் செலுத்துவது கட்டாயக் கடமை.

* ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர். ஒருவர் மீது ஒருவர் துவேசம் கொள்ளாதீர்.

- நபிகள் நாயகம்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us