Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/நன்றியுணர்வுடன் வாழுங்கள்

நன்றியுணர்வுடன் வாழுங்கள்

நன்றியுணர்வுடன் வாழுங்கள்

நன்றியுணர்வுடன் வாழுங்கள்

ADDED : ஏப் 10, 2011 02:04 PM


Google News
Latest Tamil News
* இறைவன் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக சிரமப்படுத்துவது இல்லை. சிரமத்திற்குப் பின்னர்

இலகுவை இறைவன் உண்டாக்குவான்.உண்மையில் சிரமத்துடன் இலகுவும் இருக்கின்றது.

* ஒரு பொருள் உங்களுக்கு நன்மையாக இருக்கும் நிலையில் அதனை நீங்கள் வெறுக்கக்கூடும். மேலும், ஒரு பொருள் உங்களுக்குத் தீமையாக இருக்கும் நிலையில் அதனை நீங்கள் விரும்பக் கூடும். (இவற்றை) இறைவன் நன்கு அறிகிறான். ஆனால், நீங்கள் அறிவதில்லை.

* இறைவன் உங்களை உங்கள் அன்னையரின் வயிற்றிலிருந்து வெளிக்கொணர்ந்தான்; நீங்கள் ஏதும் அறியாத நிலையில்! மேலும், செவிப்புலன்களையும், பார்வைப் புலன்களையும், சிந்திக்கும் இதயங்களையும் உங்களுக்கு வழங்கினான். நீங்கள் நன்றி செலுத்தக் கூடியவர்களாய்த் திகழவேண்டும் என்பதற்காக!

* எந்தப் பொருளில் மானக்கேடான தன்மை பொதிந்துள்ளதோ அது அதனைப் பாழ்படுத்தி விடுகின்றது. எந்தப்பொருளில் நாணம் உள்ளதோ அது அதனை ஒளிரச் செய்கிறது.

-வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து





      Our Apps Available On




      Dinamalar

      Follow us