Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/பொறுமையைக் கடைபிடிப்போம்

பொறுமையைக் கடைபிடிப்போம்

பொறுமையைக் கடைபிடிப்போம்

பொறுமையைக் கடைபிடிப்போம்

ADDED : மே 03, 2011 09:05 AM


Google News
Latest Tamil News
* (இறைவனின் அடியார்கள்) செலவு செய்யும்போது வீண் விரயமும், கஞ்சத்தனமும் செய்வதில்லை. மாறாக, அவர்களுடைய செலவு இந்த மித மிஞ்சிய இருநிலைகளுக்கிடையில் மிதமானதாக இருக்கும்.

* உமது தொழுகையில் உமது குரலை மிக உயர்த்த வேண்டாம்; மிகத் தாழ்த்தவும் வேண்டாம். இவ்விரண்டுக்கும் இடையே மிதமான தொனியைக் கடைப்பிடிக்கவும்.

* இறைதிருப்தியை பெறும் நோக்குடன் மனிதன் தன் குடும்பத்தாருக்கு செலவிடுவதையும் ஓர் அறச்செயலாகவே இறைவன் காண்கின்றான்.

* நற்செயல் என்பது நற்குணத்தை பெறுவதாகும். எந்தச் செயலை நீ மனதில் நினைத்து அதனை பிறர் அறிவதை விரும்பவில்லையோ அது பாவச்செயலாகும்.

* வறுமை மற்றும் துன்பங்களின் போதும் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தின் போதும் பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்கள் புண்ணியவான்கள் ஆவர்!

* இறைவன் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக சிரமப்படுத்துவதில்லை... சிரமத்திற்குப் பின்னர் இலகுவை இறைவன் உண்டாக்குவான்... உண்மையில் சிரமத்துடன் இலகுவும் இருக்கின்றது.

-வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து





      Our Apps Available On




      Dinamalar

      Follow us