Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/போதுமென்ற மனமே...

போதுமென்ற மனமே...

போதுமென்ற மனமே...

போதுமென்ற மனமே...

ADDED : பிப் 23, 2024 11:02 AM


Google News
Latest Tamil News
* செல்வ வளம் என்பது அதிக பணத்தைப் பெறுவதல்ல. போதும் என்ற மனதைப் பெறுவதே உண்மையான செல்வம்.

* மனிதனுக்கு வயது ஆக ஆக அவனிடத்தில் இரு விஷயங்கள் வளர்ச்சி அடைகின்றன.

1. பொருளின் மீது பேராசை

2. வயதின் மீது பேராசை.

* இருவிஷயங்கள் ஒருவரிடம் இருந்தால் அவரை நன்றி உள்ளவர், பொறுமை மிக்கவர் என குறித்துக் கொள்ளப்படும்.

1. இறைநெறியை மேற்கொள்வதில் தன்னைவிட மேலானவரைப் பார்த்தல்.

2. உலக வசதிகளைப் பொறுத்தவரை தன்னை விடக் கீழானவரைப் பார்த்து நன்றி செலுத்துதல்.

* பணம் உள்ளபோதே தர்மம் செய்துவிடுங்கள். அதுவே சிறந்த விஷயம்.

* கடனை உடனே அடைப்பதற்கு உண்டான வழியை தேடுங்கள்.

* சமாதானம் மூலம் பிரச்னையை தீர்க்கப்பாருங்கள். அதுவே அன்பை பலப்படுத்தும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us