Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/அனைத்தையும் அறிந்தவன்

அனைத்தையும் அறிந்தவன்

அனைத்தையும் அறிந்தவன்

அனைத்தையும் அறிந்தவன்

ADDED : பிப் 02, 2024 02:02 PM


Google News
Latest Tamil News
இறைவன் ஒருவனே என்பது பற்றிய சில தகவல்கள்.

* கிழக்கும் மேற்கும் அவனுக்கு உரியது. நீங்கள் எத்திசை நோக்கினாலும் அங்கே அவன் முகம் இருக்கிறது.

* அவன் விசாலமானவன். கண்ணியமும் பெருமையும் கொண்ட அவன் முகம் மட்டும் அழியாமல் நிலைத்து நிற்கும்.

* பார்வைகள் அவனை அடைய முடியாது. அவனோ பார்வைகள் அனைத்தையும் அறிந்து கொள்கிறான்.

* பெரிதாக இருக்கும் இந்த பூமி மறுமைநாளில் அவனது ஒரு கைப்பிடியில் இருக்கும். வானம் ஒரு காகிதம் போல் சுருட்டப்பட்டு அவனது வலது கையில் இருக்கும்.

* மறைவானவற்றின் சாவிகள் அனைத்தும் அவனிடம் உள்ளன. நிலம், நீரில் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான்.

* பூமியின் ஆழத்தில், இருளில் புதைந்திருக்கும் விதை பசுமையானதும், உலர்ந்ததுமான கடுகிலும் சிறியதும் கூட அவனுடைய பதிவேட்டில் உள்ளது.

* நரகவாசிகள் நரகத்தில் சிறைப்படுவார்கள். அங்கு வயிறு நிரம்பாத காரணத்தால் 'இன்னும் அதிகம் இருக்கிறதா' எனக் கேட்கும். இறுதியில் அவன் தன் பாதத்தை அதில் வைப்பான். அப்போது அது 'போதும். போதும்' என்று கூறும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us