Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/தாயின் காலடியில் சொர்க்கம்

தாயின் காலடியில் சொர்க்கம்

தாயின் காலடியில் சொர்க்கம்

தாயின் காலடியில் சொர்க்கம்

ADDED : ஆக 01, 2010 12:08 PM


Google News
Latest Tamil News
* இறைவன் கூறுகின்றான்: பெற்றோர் நலன் பேண வேண்டும் என்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவனுடைய தாய் நலிவுக்கு மேல் நலிவை ஏற்று அவனைத் தன் வயிற்றில் சுமந்தாள். மேலும், அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகள் பிடித்தன. (எனவே) எனக்கு நன்றி செலுத்து. மேலும், உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து.

* நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

சுவனம் (சொர்க்கம்) தாயின் காலடியில் இருக்கிறது. (தாய்க்கு பணிவிடை செய்பவர் சுவனம் புகுவர்)

* இறைத்தூதரே! எனது பெற்றோர் இறந்த பின்னரும் அவர்களுக்கு நான் ஆற்ற வேண்டிய கடமை ஏதும் எஞ்சியுள்ளதா என ஒரு நபித்தோழர் கேட்டார். நபிகள் நாயகம்

(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: ஆம்! அவர்களுக்காக இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோருங்கள். அவர்களின் மரண சாசனத்தை நிறைவேற்றுங்கள். பெற்றோர்களின் உறவுகளைத் துண்டிக்காமல் வாழுங்கள். பெற்றோர்களின் நண்பர்களுக்கு கண்ணியம் அளியுங்கள். அவர்களை உபசரியுங்கள்.

( வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)





      Our Apps Available On




      Dinamalar

      Follow us