Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/மயங்காதிரு மனமே!

மயங்காதிரு மனமே!

மயங்காதிரு மனமே!

மயங்காதிரு மனமே!

ADDED : ஏப் 30, 2010 09:48 AM


Google News
Latest Tamil News
இறைவன் கூறுகின்றான்:

* (நபியே!) மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: அவ்விரண்டிலும் பெருங்கேடு

இருக்கிறது. அவற்றில் மக்களுக்கு சிறிது பயன்கள் இருப்பினும் அவற்றினால் ஏற்படும் பாவம் அவற்றின் பயனை விட அதிகமாக இருக்கின்றது.

(திருக்குர்ஆன்(2:219)

* மது மற்றும் சூதாட்டத்தின் வாயிலாக உங்களுக்கு இடையில் பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தி இறைவனை நினைவு கூர்வதிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடவே ஷைத்தான் விரும்புகிறான். இதற்குப் பிறகாவது நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்வீர்களா?

திருக்குர்ஆன் (5:91)

* நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்: எந்தப் பொருளை அதிக அளவில் உட்கொண்டால் போதை உண்டாகுமோ, அதே பொருளை குறைந்த அளவில் உட்கொள்வதும் தடை செய்யப்படுகிறது.

நூல்: அஹ்மத், அபூதாவூத்

(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)





      Our Apps Available On




      Dinamalar

      Follow us