Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/இறைவனையே சார்ந்திருங்கள்

இறைவனையே சார்ந்திருங்கள்

இறைவனையே சார்ந்திருங்கள்

இறைவனையே சார்ந்திருங்கள்

ADDED : ஜன 12, 2011 07:01 PM


Google News
Latest Tamil News
* இறைவன் நன்கறிபவனாகவும்,

நுண்ணறிவு மிக்கவனாகவும்

இருக்கின்றான்... படைக்கும் ஆற்றலும், கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக்குரியவையே!

* யாரேனும் இறைவனுக்கு அஞ்சி (யவண்ணம்

செயல்படுவாரா) னால் இறைவன் அவருக்கு

(சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்கு) ஏதேனும் வழிவகையை ஏற்படுத்துவான். மேலும், அவர் நினைத்துப் பார்த்திராத வகையிலிருந்து அவருக்கு வாழ்வாதாரமும் வழங்குவான். யார் இறைவனையே முழுவதும்

சார்ந்திருக்கின்றாரோ அவருக்கு இறைவன்

போதுமானவன்.

* இறைவனைத் தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ள எவரும் மறைவான உண்மைகளை அறிய மாட்டார்.

* நிச்சயமாக படைப்புகளை முதன் முறையாக அவனே படைக்கிறான். பின்னர் மறுமுறையும் அவனே

படைக்கின்றான். ஏனெனில் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிவோருக்கு நீதியுடன் கூலி வழங்க வேண்டும் என்பதற்காக!

* உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை நீங்கள்

வெளிப்படுத்தினாலும் அல்லது மறைத்து வைத்தாலும் எந்நிலையிலும் இறைவன் உங்களிடம் அவை

பற்றிக் கணக்கு கேட்பான்.

(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)




      Our Apps Available On




      Dinamalar

      Follow us