ADDED : ஏப் 19, 2013 05:04 PM

* மனிதர்கள் செய்த உதவியைச் சிந்திப்பதை விட இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்யுங்கள்.
* மற்றவர்களின் குற்றங்களை நோட்டமிடுவதை விட உங்களின் குற்றங்களை நோட்டமிடுங்கள்.
* உன் வாயிலாக, இறைவன் ஒரு மனிதனுக்கு நேர்வழி காட்டுவது இவ்வுலகத்தையும் இதிலுள்ள யாவற்றையும் விட உனக்கு நன்மை பயப்பதாகும்.
* எவர் அண்டை வீட்டாரைத் துன்புறுத்துகின்றாரோ அவர் என்னைத் துன்புறுத்தியவராவார்.
* தர்மம் செய்ய இயலாதவன் ஒரு நற்செயல் செய்வானாக அல்லது ஒரு கெட்ட செயலில் இருந்து விலகிக் கொள்வானாக. அதுவே அவனது ஈகை.
* உங்களை நம்பி ஒருவன் ஒரு செய்தியைச் சொன்னால், அதை அடைக்கலப் பொருள் போல பாதுகாத்து வையுங்கள்.
* எவர் ஒருவர் இறைவனிடத்தில் தேவையானதை கேட்கவில்லையோ அவர் மீது இறைவன் கோபம் அடைகின்றான்.
- நபிகள் நாயகம்
* மற்றவர்களின் குற்றங்களை நோட்டமிடுவதை விட உங்களின் குற்றங்களை நோட்டமிடுங்கள்.
* உன் வாயிலாக, இறைவன் ஒரு மனிதனுக்கு நேர்வழி காட்டுவது இவ்வுலகத்தையும் இதிலுள்ள யாவற்றையும் விட உனக்கு நன்மை பயப்பதாகும்.
* எவர் அண்டை வீட்டாரைத் துன்புறுத்துகின்றாரோ அவர் என்னைத் துன்புறுத்தியவராவார்.
* தர்மம் செய்ய இயலாதவன் ஒரு நற்செயல் செய்வானாக அல்லது ஒரு கெட்ட செயலில் இருந்து விலகிக் கொள்வானாக. அதுவே அவனது ஈகை.
* உங்களை நம்பி ஒருவன் ஒரு செய்தியைச் சொன்னால், அதை அடைக்கலப் பொருள் போல பாதுகாத்து வையுங்கள்.
* எவர் ஒருவர் இறைவனிடத்தில் தேவையானதை கேட்கவில்லையோ அவர் மீது இறைவன் கோபம் அடைகின்றான்.
- நபிகள் நாயகம்