Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/இறைவனிடம் கேளுங்கள்

இறைவனிடம் கேளுங்கள்

இறைவனிடம் கேளுங்கள்

இறைவனிடம் கேளுங்கள்

ADDED : ஏப் 19, 2013 05:04 PM


Google News
Latest Tamil News
* மனிதர்கள் செய்த உதவியைச் சிந்திப்பதை விட இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்யுங்கள்.

* மற்றவர்களின் குற்றங்களை நோட்டமிடுவதை விட உங்களின் குற்றங்களை நோட்டமிடுங்கள்.

* உன் வாயிலாக, இறைவன் ஒரு மனிதனுக்கு நேர்வழி காட்டுவது இவ்வுலகத்தையும் இதிலுள்ள யாவற்றையும் விட உனக்கு நன்மை பயப்பதாகும்.

* எவர் அண்டை வீட்டாரைத் துன்புறுத்துகின்றாரோ அவர் என்னைத் துன்புறுத்தியவராவார்.

* தர்மம் செய்ய இயலாதவன் ஒரு நற்செயல் செய்வானாக அல்லது ஒரு கெட்ட செயலில் இருந்து விலகிக் கொள்வானாக. அதுவே அவனது ஈகை.

* உங்களை நம்பி ஒருவன் ஒரு செய்தியைச் சொன்னால், அதை அடைக்கலப் பொருள் போல பாதுகாத்து வையுங்கள்.

* எவர் ஒருவர் இறைவனிடத்தில் தேவையானதை கேட்கவில்லையோ அவர் மீது இறைவன் கோபம் அடைகின்றான்.

- நபிகள் நாயகம்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us