Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மகாவீரர்/உயிர்களை நேசியுங்கள்

உயிர்களை நேசியுங்கள்

உயிர்களை நேசியுங்கள்

உயிர்களை நேசியுங்கள்

ADDED : அக் 01, 2012 09:10 AM


Google News
Latest Tamil News
* பொறுமை நல்லவர்களின் அடையாளம். பிறர் இகழ்ந்தாலும் கூட பொறுத்துக் கொள்பவனே நல்ல அறிஞன்.

* அடக்கத்துடன் வாழும் இல்லறத்தார் அடக்கமில்லாமல் வாழும் துறவிகளைக் காட்டிலும் மேலானவர்கள்.

* செய்த பாவங்களுக்குரிய தண்டனையை அனுபவிக்காமல் சொர்க்கத்திற்குள் நுழைய முடியாது.

* எதையும் தீர ஆலோசித்து பேச வேண்டும். மிதமாகப் பேசுபவனையே பெரியோர்கள் மதிப்பர்.

* நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைப்பதே அகிம்சை. மனிதன் எல்லா உயிர்களையும் நேசித்து வாழப் பழக வேண்டும்.

* பாவச் செயல்கள் தொடக்கத்தில் இன்பத்தை அளித்தாலும் அதன் முடிவு துன்பமாகவே இருக்கும்.

* எண்ணம், சொல், செயலால் நெறியோடு வாழ்வதே நல்லொழுக்கம்.

* உண்மையாக நடக்கும் மனிதனுக்கு உபதேசம் தேவையில்லை.

* சொல்லக்கூடாத விஷயத்தை மற்றவர்களிடம் சொல்லாமல் இருப்பதே மேலானது.

- மகாவீரர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us