Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/சகல வளமும் தந்தருள்வாய்

சகல வளமும் தந்தருள்வாய்

சகல வளமும் தந்தருள்வாய்

சகல வளமும் தந்தருள்வாய்

ADDED : செப் 14, 2012 10:09 AM


Google News
Latest Tamil News
விநாயகர் சதுர்த்தியான இன்று சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம் இதோ!

* உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே! நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனமகிழ்ச்சியைத் தருபவனே! கருணாமூர்த்தியே! ஒற்றைக்கொம்பனே! சகிப்புத்தன்மை,பொறுமை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களை தருபவனே! உனக்கு என் இனிய நமஸ்காரம்.

* பக்தர்களை ஓடோடி காக்க வருபவனே! உண்மைக்கு துணை நிற்பவனே! யானைமுகனே! பரம் பொருளே! உன் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன். எம்பெருமானே! மங்கலத்தை தந்தருள்வாயாக.

* பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை கொண்டவனே! ஒற்றைக் கொம்பனே! ஆதியும் அந்தமும் இல்லாதவனே! துன்பங்களைப் போக்குபவனே! காலமெல்லாம் உன்னை நினைத்து,வணங்கி வருகிறேன். எங்களுக்கு சகல செல்வத்தையும் தந்தருள்வாயாக.

கிருபானந்த வாரியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us