Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/வீட்டிலும் தவம் செய்யலாம்

வீட்டிலும் தவம் செய்யலாம்

வீட்டிலும் தவம் செய்யலாம்

வீட்டிலும் தவம் செய்யலாம்

ADDED : டிச 31, 2010 07:12 AM


Google News
Latest Tamil News
*சிவனுக்கும், ஜீவனுக்கும் உள்ள வித்தியாசம், முதல் எழுத்தின் தலையில் ஒரு சுழிதான். தலையில் சுழி உள்ளது ஜீவன். தலைச்சுழி இல்லாதது சிவன்.

* பிள்ளையார் முன் பயபக்தியுடன் குட்டிக் கொண்டு, நன்றாக உட்கார்ந்து, எழுந்து, மூன்று முறை தோப்புக்கரணம் போட வேண்டும். இதனால், அறிவும் ஆரோக்கியமும் பலம் பெறும்.

* சத்தியத்தைக் கூறுவதுடன், தர்மவழியில் நடக்க வேண்டும். தாய், தந்தை, குரு ஆகியோரைத் தெய்வமாகக் கொள்ள வேண்டும்.

* உலகம் முழுவதும் எங்கும் கடவுள் நிறைந்திருக்கிறார். பாலில் நெய்யிருப்பது கண்ணுக்குத் தெரிவதில்லை.

கண்ணுக்குத் தெரியாததால் பாலில் நெய்யில்லை என்று அர்த்தமில்லை.

* எந்த பாவத்தைச் செய்தாலும் தெய்வம் மன்னிக்கும். நன்றி மறப்பது என்னும் பாவத்தை மட்டும்

மன்னிப்பதில்லை.

* தவம் செய்ய காட்டுக்குப் போக வேண்டாம். பட்டினி வேண்டாம். தலைகீழாக நிற்க வேண்டாம். மனைவி

மக்களுடன் வாழ்ந்து கொண்டே தவம் செய்யலாம்.

-வாரியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us