Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/புத்தியைக் கொடுத்தது எதற்காக!

புத்தியைக் கொடுத்தது எதற்காக!

புத்தியைக் கொடுத்தது எதற்காக!

புத்தியைக் கொடுத்தது எதற்காக!

ADDED : மார் 10, 2011 12:03 PM


Google News
Latest Tamil News
* கிணற்று நீரில் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதில்லை. ஆனால், தண்ணீர் மட்டத்துக்கு மேலே குடம் வந்தவுடன் கனக்க ஆரம்பிக்கிறது. அதுபோல் நம் துக்கங்களை ஞானமான தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போதும் துக்கத்துக்கான காரணங்கள் இருந்தாலும், தண்ணீருக்குள் இருக்கிற குடம் மாதிரி

துக்கம் லேசாகிவிடும்.

* நல்ல செயல்கள் செய்தால் ஈஸ்வரன் நமக்கு கை கொடுப்பார், அவர் தான் நமக்கு கை, கால், கண் வழங்கியதுடன், ஆலோசிக்க புத்தியும் கொடுத்துள்ளார். இந்த சக்தியும், புத்தியும் இருப்பதற்குள்ளே திருந்துவதற்கான நல்ல செயல்களை செய்ய வேண்டும்.

* வழுக்கு மரத்தின் இயல்பு சறுக்குவது. சறுக்கிச் சறுக்கி விழுவதைச் சமாளித்துக் கொண்டு முயற்சி செய்து மேலே ஏறினால் வெற்றி உண்டாகும். அப்படியே வாழ்வில் சறுக்குவதும் இயல்பாகும்.

* தீய எண்ணம் உள்ளவனோடு சேர்க்கை வைத்துக் கொள்ளும் போது தீய எண்ணம் ஏற்படுகிறது. கோபம், தீய எண்ணம் இல்லாத தட்சிணாமூர்த்தியைப் பார்க்கும் போது நமக்கு சாந்தம் உண்டாகிறது.

- காஞ்சிப்பெரியவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us