Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/முதியவர்கள் என்ன செய்ய வேண்டும்?

முதியவர்கள் என்ன செய்ய வேண்டும்?

முதியவர்கள் என்ன செய்ய வேண்டும்?

முதியவர்கள் என்ன செய்ய வேண்டும்?

ADDED : டிச 06, 2007 07:05 PM


Google News
Latest Tamil News
* தாயன்பைப் போல கலப்படமே இல்லாத பூரண அன்பை இந்த லோகத்தில் வேறு எங்குமே காணமுடியாது.

* பால பிராயத்திலேயே காயத்ரியை ஜபிக்க ஆரம்பித்துவிட்டால் அது பசுமரத்தாணியாக பதியும். காயத்ரியானது முக்கியமான மனோசக்தி, தேஜஸ், ஆரோக்கியம் எல்லாவற்றையும் அபரிமிதமாக தரவல்லது.

* நீ பலனை எதிர்பார்க்காமல் தர்மங்களை செய். பலனை கொடுக்க வேண்டியது ஈஸ்வரனின் வேலை என்கிறது உபநிஷதம்.

* குடும்ப பொறுப்புக்களை கூடிய விரைவில் முதியவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு பதில் பொது ஜனங்களுக்காக பொறுப்பெடுத்துக் கொண்டு புண்ணியம் சம்பாதிக்க வேண்டும். தாங்கள் தங்கள் ஆத்மாவை கவனித்துக் கொள்ள வேண்டும்.

* தனக்கென்று எவ்வளவுகுறைவாக செலவழிக்க முடியுமோ, அப்படி எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அதை தர்மத்திற்கு செலவழிக்க வேண்டும்.

* அந்தரங்க சுத்தம் இல்லாமல் செய்கின்ற காரியங்கள் படாடோபமாகவே முடிந்துவிடும்.

* நாம் பக்தி செய்வதால் ஈஸ்வரனுக்கோ, குருவுக்கோ எந்த லாபமும் இல்லை. நமக்குதான் பெரிய லாபம்.

* நம் சரீரத்திற்கு எந்த வியாதி வந்தாலும், எந்த கஷ்டம் வந்தாலும், நிரம்ப வறுமையினாலே சிரமப்பட்டாலும், இவையெல்லாம் நமக்கு வைராக்கியத்தை கொடுப்பதற்காக சுவாமியினால் கொடுக்கப்பட்டவை என கருதவேண்டும். இவையெல்லாம் 'தபஸ்' என்று நினைத்துக்கொள்ள வேண்டும்.

 





      Our Apps Available On




      Dinamalar

      Follow us