Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/முன்வந்து உதவி செய்

முன்வந்து உதவி செய்

முன்வந்து உதவி செய்

முன்வந்து உதவி செய்

ADDED : ஜூன் 05, 2011 11:06 AM


Google News
Latest Tamil News
* மனதாலும், இனிமையான பேச்சாலும், உடம்பாலும், பணத்தாலும் நல்ல செயல்களை தினமும் செய்.

* நம்மிடம் உள்ள பணமெல்லாம் எப்போதும் நம்முடையதல்ல என்ற நினைவு இருக்கட்டும்.

* அனைத்து செயல்களிலும் அளவறிந்து நிற்கிற மனநிலை வந்தால் தான் அமைதி உண்டாகும்.

* நமது சொந்த விருப்பங்களுக்காக செயல்படுகிறோம் என்ற நிலையை மாற்றி, நமக்கு எவ்விதமான லாபமும் தராத செயல்களில் ஈடுபட வேண்டும்.

* தூய்மையோடு மகிழ்ச்சியாக இருப்பது தான் மங்களம். எங்கே நாம் போனாலும் அங்கே மகிழ்ச்சியை உருவாக்க வேண்டும்.

* அவரவரும் உரிய கடமையை பக்தியோடு பின்பற்றினால் தான் மனதில் ஒழுக்கம், கட்டுப்பாடு, மனத்தூய்மை ஏற்பட்டு ஞானம் கைகூடும்.

* ஒழுக்கம் இருந்தால், அப்புறம் ஒவ்வொரு துறையிலுமே ஒழுக்கத்தினால் உண்டாகிற அழகும் ஏற்பட்டு விடுகிறது.

* துன்பம் இருக்கும் இடத்திற்கு நாமாக முன்வந்து சென்று, அந்தத் துயரத்தை நீக்க நம்மால் முடிந்த செயலை செய்ய முயல வேண்டும். இது மிகப்பெரிய தர்மமாகக் கருதப்படுகிறது.

-காஞ்சிப்பெரியவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us