Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/மன அமைதிக்கு வழி

மன அமைதிக்கு வழி

மன அமைதிக்கு வழி

மன அமைதிக்கு வழி

ADDED : செப் 21, 2010 06:09 PM


Google News
Latest Tamil News
* நாள் முழுவதும் இயந்திரங்களுடன் வேலை செய்வதால் நாமும் இயந்திரம் போல் ஆகிவிட்டோம். நம் மனதில் எப்போதும் அமைதியோ, தெளிவோ இருப்பதில்லை. அலுவலகம் சென்று வந்ததும் களைத்துப்போய் தூங்கி விடுகிறோம் அல்லது பொழுது போக்குகிறோம். தரமான நல்ல புத்தகங்களை படிக்கக் கூட நினைப்பதில்லை.

* பெரும்பாலான மனிதர்கள் வாழ்வின் பெரும்பகுதியை பொருள் தேடுவதிலேயே கழித்துவிடுகிறார்கள். இன்னும் சிலர், வாழ்வின் நோக்கமே பொருள் சேர்ப்பது மட்டுமே என்று கூட நினைக்கிறார்கள். மனம் பற்றிய சிந்தனையோ, அது ஒழுங்காக இருந்தால் தான் நிம்மதியாக வாழ

முடியும் என்ற அக்கறையோ நமக்கு இருப்பதில்லை.

* அன்றாடம் காலையில் எழுந்தவுடன் உடல் தூய்மைக்காக குளியல் செய்கிறோம். ஆனால், மனத்தூய்மைக்கும், நிம்மதியான வாழ்க்கைக்கும், நல்லவர்களின் சேர்க்கை மிக அவசியம். அப்போது தான் அவர்களுடைய வாசனையால் நமக்கும் ஆண்டவனின் நினைப்பு உண்டாகும். நோய் வந்தால் மருத்துவர் உதவி தேவைப்படுவதுபோல, கவலைப்படும் மனம் அமைதி பெற ஒரே வழி பிரார்த்தனை மட்டும் தான்.

- காஞ்சிப்பெரியவர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us