Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/மனதிற்கு கடிவாளம் தேவை

மனதிற்கு கடிவாளம் தேவை

மனதிற்கு கடிவாளம் தேவை

மனதிற்கு கடிவாளம் தேவை

ADDED : செப் 14, 2011 08:09 AM


Google News
Latest Tamil News
* அலைபாயக் கூடிய மனதை அடக்க முடியாது என பலர் எண்ணுகிறார்கள். அதற்கு சரியான ஒரு கடிவாளம் போட்டுவிட்டால் அலைபாய்ந்து கொண்டிருக்காது.

* முயற்சி, பக்தி, தியானம் உள்ளவர்கள் மனதை வசப்படுத்திவிடுகிறார்கள். செயல்களில் ஒருமுகத்தன்மையோடு ஈடுபட்டு அதில் வெற்றியும் காண்பார்கள்.

* மனதில் ஏற்படும் ஆசைகளே நாம் அனுபவிக்கும் அத்தனை துன்பங்களுக்கும் மூலகாரணமாக இருக்கிறது. நாம் கண்ணால் ஒரு பொருளைப் பார்க்கும்போது, அதனை அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. மனம் தான் அனுபவிக்கத் துடிக்கிறது. அதற்காக எத்தகைய செயலைச் செய்யவும் தூண்டுகிறது. அதனால் தீமைகள் தான் வருமே தவிர நன்மைகள் எதுவும் உண்டாகாது.

* மனம் உங்களது சொல்கேட்டு நடந்தால் தான் உங்களது புத்தி சரியாக இருப்பதாக அர்த்தம். மனதை கட்டுப்படுத்த முடியாதவர்கள் சரியாக புத்தி அமையப் பெறாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். எனவே, மனதை அடக்கி வாழ கற்றுக் கொள்ளுங்கள்.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us