Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/பிற உலகத்தவருக்கும் சேவை

பிற உலகத்தவருக்கும் சேவை

பிற உலகத்தவருக்கும் சேவை

பிற உலகத்தவருக்கும் சேவை

ADDED : டிச 24, 2008 06:28 PM


Google News
Latest Tamil News
<P>* மனிதனாகப் பிறந்தவனுக்கு வாழ்வில் உண்டாகும் பாக்கியங்களிலேயே மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே. சேவை என்றால் என்னவென்று தெரியாமல், அவரவரும் தமது குடும்பத்திற்காக மட்டுமே சேவை செய்கிறோம். அதோடு, நமக்கு சம்பந்தம் இல்லாத பிறருக்கும் முடிந்த சேவைகளைச் செய்ய வேண்டும்.<BR>* சமைப்பதற்காக பானையில் அரிசி போடும் போது, பகவானை நினைத்துக் கொண்டு ஏழைகளுக்கு என்று ஒருபிடி அரிசியை ஒரு கலயத்தில் போட்டு விட வேண்டும். இதை மொத்தமாக ஒருநாளில் சேகரித்து, சமைத்து அந்தந்த பகுதி கோவில்களில் ஏழைகளுக்கு அன்னமிட வேண்டும். <BR>* தினமும் ஒரு பசுமாட்டுக்காவது ஒரு கைப்பிடி புல்லோ அல்லது அகத்திக்கீரையோ கொடுக்க வேண்டும். <BR>* பொதுமக்களுக்காக கிணறு, குளம் வெட்டுவது, அன்னதானம் செய்வது, ஆத்ம ஷேமத்திற்காக கோவில் கட்டுவது, பூஜைக்காக நந்தவனம் அமைப்பது போன்றவையும் தர்மங்களே. <BR>* யாகம், யக்ஞம், தர்ப்பணம், திவசம் முதலிய இந்த உலகம் மட்டுமின்றி மற்ற உலகங்களில் இருப்பவர்களுக்கும் நம் சேவையை செய்ய வேண்டியது நம் தர்மமாகும். </P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us