ADDED : ஜூன் 11, 2015 10:06 AM

* உதவி என்றில்லாமல், பிறருக்கு நல்லது நினைத்தாலும் புண்ணியம் கிடைக்கும். * அகிம்சை நெறியை பின்பற்றுபவரிடம் சேர்ந்தால் தீயவனும் திருந்தி விடுவான். * அர்ப்பணிப்பு எண்ணமுடன் நற்செயலில் ஈடுபட்டால் இன்ப வாழ்வு உண்டாகும். * மனதில் நினைப்பதையே பேச வேண்டும். எண்ணம் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருக்கக் கூடாது. * உண்ணும் முன்பு கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். அவனருளால் தான் நமக்கு உணவு கிடைக்கிறது. * தகுதி இருந்தால் மட்டுமே பிறருக்கு அறிவுரை கூறுங்கள். இல்லாவிடில் அமைதியாக இருங்கள். -காஞ்சிப்பெரியவர்