Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/தீபாவளியின் நோக்கம்

தீபாவளியின் நோக்கம்

தீபாவளியின் நோக்கம்

தீபாவளியின் நோக்கம்

ADDED : நவ 11, 2012 10:11 AM


Google News
Latest Tamil News
* அன்பால் பிறரைத் திருத்தி நல்வழிப்படுத்த முடியும். அன்பால் ஒருவரை திருத்தினால் தான் நமக்குப் பெருமை.

* பாவம், புண்ணியம் என்பது ஒரு செயலைப் பொறுத்தது அல்ல. செயலாற்றுபவரின் நோக்கத்தைப் பொறுத்தது. நற்செயலாக இருந்தாலும், நோக்கம் தவறானதாக இருந்தால் அது பாவமே.

* ஆசை, கோபம், துவேஷம், பயம் ஆகியவற்றை மனதை விட்டு அடியோடு அகல வேண்டும்.

* விருப்பு வெறுப்புடன் செய்யும் எச்செயலும் பாவமானது தான். விருப்பு, வெறுப்பு இல்லாமல் செயலாற்றும் போது உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. 'நான்' என்ற அகம்பாவம் இல்லாமல் மனிதன் தன் கடமைகளைச் செய்ய வேண்டும்.

* அறியாமை என்பது வியாதிக்குச் சமமானது. அறியாமை நம்மிடம் இருக்கும்வரை நமக்கு மகிழ்ச்சி இல்லை. அறியாமை நோய் தீர ஞானமே சிறந்த மருந்து. அந்த ஞானதீபத்தை மனதில் ஏற்றவே தீபாவளி கொண்டாடுகிறோம்.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us