Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/முடிந்த உதவி செய்யுங்கள்

முடிந்த உதவி செய்யுங்கள்

முடிந்த உதவி செய்யுங்கள்

முடிந்த உதவி செய்யுங்கள்

ADDED : செப் 14, 2012 10:09 AM


Google News
Latest Tamil News
* தினமும் அரைமணி நேரமாவது மவுனமாக இருக்கப் பழக வேண்டும். ஜாடை காட்டுவது கூட கூடாது.

* விரதம் மேற்கொள்ளும் நாளில் மவுனத்தையும் கடைபிடித்தால் வாய், வயிற்றுக்கு வேலை இல்லாமல் போய்விடும். அதனால் அன்று நாள் முழுதும் கடவுள் பக்தியில் ஒன்றுவதற்கு ஏதுவாகும்.

* சிக்கனத்தை ஒருவன் கடைபிடித்தால் கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. மற்றவர்களுக்கு இயன்ற உதவிகளையும் செய்ய முடியும்.

* திருமணத்தை பொருளாதாரப் பிரச்னையாக மாற்றியிருப்பது அநியாயம். வரதட்சணை வாங்குவது திருடுவதற்குச் சமம்.

* உலகத்தைப் படைத்து ஒரு கட்டுப்பாட்டில் நிலைநிறுத்தி வைத்திருக்கும் பெரிய அறிவு ஒன்று இருக்கிறது. எங்கும் நிறைந்திருந்திருக்கும் அந்த அறிவாற்றலையே கடவுள் என்று குறிப்பிடுகிறோம்.

* தன் கையே தனக்கு உதவி என்று மட்டும் எண்ணாமல் அந்தக் கையால் மற்றவருக்கும் முடிந்த உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும்.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us